அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் 70 பேரைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று மாலை சிறிலங்காவை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிங்கப்பூர் பிரதமரை, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.
ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள செங் சுவேயுவான் நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சீன- சிறிலங்கா நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகள், சீன தொழிற்துறை மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே சிங்கப்பூர் பிரதமர் இன்று கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பதுளை தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள அதேவேளை, மாகாண கல்வி அமைச்சர் பதவியில் இருந்து அவர் நேற்று விலகினார்.
ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.