மேலும்

முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய ஜப்பானின் 70 பிரதிநிதிகள் சிறிலங்கா வருகின்றனர்

japan flagஜப்பானின் முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் 70 பேரைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

உயர் அதிகாரம் கொண்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளின்  குழுவொன்று கடந்த 40 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

சிறிலங்காவில் முதலீட்டு மற்றும் வணிக வாய்ப்புகளை  அடையாளம் காண்பதற்காகவே ஜப்பானின் உயர்மட்ட குழு கொழும்பு வரவுள்ளது.

இந்தக் குழுவில், ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான, ரொயோட்டா, ஹொண்டா, மிற்சுபிசி, சுமிரோமோ, மிட்சுயி ஜப்பான் எயர்லைன்ஸ், ஈஸ்ரேர்ன் வங்கி,  ரோக்கியோ மிட்சுபிசி வங்கி, நிப்பொன் எயர்வேய்ஸ், நிப்பொன் ஸ்டீல்ஸ் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளனர்.

இந்தக் குழுவினர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஜப்பான்- சிறிலங்கா இடையிலான இருதரப்பு வணிகம், 1,150 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *