சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தியாவில் நான்கு நாட்கள் பயணம்
சிறிலங்கா வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, நான்கு நாட்கள் இந்தியாவில் அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 20ஆம் நாள் தொடக்கம், 23ஆம் நாள் வரை, சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, தென்பிராந்திய கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் கார்வே, ஆகியோரைச் சந்தித்து சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு நடத்தியுள்ளார்.
கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய கட்டளைத் தலைமையகத்துக்கும் சென்று பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகளில் பங்கேற்றிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார்.