மேலும்

அஞ்சல் மூல வாக்களிப்பு ஜனவரி 25ஆம், 26ஆம் நாள்களில்

postal-votesஉள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25ஆம், 26ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இரண்டு கட்டங்களாக நடந்த வேட்புமனுத் தாக்கல் கடந்த 21ஆம் நாளுடன் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அஞ்சல் மூல வாக்களிப்பு, ஜனவரி 25, 26ஆம் நாள்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

அதேவேளை, தேர்தல்கள் திணைக்களம் மற்றும் காவல்துறையினர், எதிர்வரும் ஜனவரி 22 ஆம் நாள் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணையப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *