மேலும்

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ்

Narendra-Modiசிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மனிஷ் திவாரி, இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“ நேபாளத்தின் புதிய அரசாங்கம் இந்தியாவைச் சார்ந்ததாக இல்லை.

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு கவலையளிக்கின்ற விடயமாக உள்ளது.

இந்தியாவுக்குத் தெரியாமல், சீனாவுடன் மாலைதீவு சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொண்டுள்ளது.

டோக்லமில், சீனா நிரந்தரமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் தவறான வெளிவிவகாரக் கொள்கையினால், இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது”  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *