மக்களை எதிர்கொள்ள முடியாததால் பதவி விலகினேன் – என்கிறார் நிமல் லான்சா
உள்நாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிமல் லான்சா, நேற்று அறிவித்துள்ளார்.
நாட்டின் விலைவாசி அதிகரித்துள்ளதாகவும், இந்தப் பதவியுடன் தம்மால் மக்களை எதிர்கொள்ள முடியவில்லை என்பதால், பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கம்பகா மாவட்டத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட நிமல் லான்சா, 2015ஆம் ஆண்டில் இருந்து பிரதி அமைச்சராக பதவியில் இருந்து வந்தார்.
பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ள போதும், தாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே தொடர்ந்தும் இருப்பேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.