அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு முதல் கப்பல் வந்தது
அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர், முதலாவது கப்பல், இறங்குதுறைக்கு வந்துள்ளது.
பனாமாவில் இருந்து 400 வாகனங்களை ஏற்றிய கப்பல் ஒன்றே அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் இருந்து வாகனங்களை இறக்கும் பணிகளை கொழும்பு லொஜிஸ்டிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.