தேயிலை இறக்குமதி தடை – மாத இறுதியில் சிறிலங்காவுடன் பேச ரஷ்யா திட்டம்
சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதித்த தடை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின், விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான, Rosselkhoznadzor இம்மாத இறுதியில் சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் தலைமையிலான குழு Rosselkhoznadzor அமைப்பை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியிருந்தது.
இதன்போது, ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி தொடர்பாக சிறிலங்கா எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.