மேலும்

50 சீன இணையர்களுக்கு கொழும்பில் திருமணம் – சிறிலங்கா அரசே நடத்தி வைத்தது

chinese -wedding (1)50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இந்த திருமண விழாவுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.

சிறிலங்கா முறைப்படி இந்தத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட சீன இணையர்களுக்கான திருமணச் சான்றிழ்களை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க ஆகியோர் வழங்கினர்.

chinese -wedding (1)chinese -wedding (2)

இந்த நிகழ்வு சீன- சிறிலங்கா உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *