வீரவன்ச கட்சியின் முக்கிய தலைவர்கள் மூவர் சுதந்திரக் கட்சியில் இணைவு
விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள் மூவர் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க, வடமத்திய மாகாணசபை உறுப்பினர் பி.பிகுமார ஆகியோரே இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட இவர்கள், கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக் கொண்டனர்.