மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

sivasakthy-ananthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றுமாலை அவருக்கு ஏற்பட்ட மார்புவலியை அடுத்து, வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *