மேலும்

27 ஆண்டுகளுக்குப் பின்னர் வசாவிளானில் 29 ஏக்கர் காணிகள் சிறிலங்கா படையினரால் விடுவிப்பு

hszவலிகாமம் வடக்கில், வசாவிளான் பகுதியில் 27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினர் வசம் இருந்து வந்த 29 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

வசாவிளான், வடமூலைப் பகுதியில் உள்ள 29 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வு இன்று காலை வசாவிளான் உத்தரியமாதா தேவாலய முன்றலில் இடம்பெற்றது.

இதன் போது, யாழ். படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, காணிகள் விடுவிப்பு தொடர்பான ஆவணங்களை யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வுதநாயகனிடம் கையளித்தார்.

1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து, இந்தக் காணிகள் சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *