நினைவேந்தலுக்குத் தயாராகியுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் (படங்கள்)
மாவீரர் நாளான இன்று தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களும், மாவீரர் நினைவிடங்களும், புத்துயிர் பெற்று எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில், மாலை 6.05 மணிக்கு மணியோசையுடன் ஆரம்பமாகும் மாவீரர் இறுதி வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகள், துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மாலை 6.07 மணிக்கு அனைத்து இடங்களிலும் மாவீரர்கள் நினைவாக சுடர்கள் ஏற்றப்படவுள்ளன.
தாயத்தில் புதுப்பொலிவு கண்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் நினைவிடங்கள் சில காட்சிகளாக….