யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு எழுச்சியுடன் அஞ்சலி
தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் மாவீரர்களுக்கு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கத்தில் இன்று காலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மாவீரர்கள் நினைவாக நாட்டுவதற்காக பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.