யாரும் போகலாம், யாரும் வரலாம் திறந்தே கிடக்கிறது கதவு – கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எவரும் வெளியே செல்வதற்கு தடையில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நேற்று முன்தினம் நடத்திய சந்திப்பின் போதே, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளமை குறித்து எழுப்பப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி தலைவர்கள்-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே உள்ளன. எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் எவரும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம்.
அதுபோலவே, கூட்டமைப்பில் இருந்தும் சுதந்திரமாக வெளியேறலாம். அதற்கான உரிமை பங்காளிக் கட்சிகளுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திறந்த விட்டுக்குள் ஏதோ நுழைவது மாதிரி என்று சொல்வார்களே, அந்த மாதிரியான ஆட்கள் இருக்கும் இடம்தான் த.தே.கூ. எனப் பங்காளிக் கட்சிகள் கூறுகின்றனரா ?