மேலும்

ஜின்தோட்டையில் இன்று மாலை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்

sri lanka policeகாலி மாவட்டத்தில் உள்ள ஜிந்தோட்டை பிரதேசத்தில்  இன்று மாலை மீண்டும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, ஜின்தோட்டை பிரதேசத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிக்கு நீக்கப்பட்டது.

எனினும், அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, இன்று மாலை 6 மணியளவில் மீண்டும் ஊரடங்கச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜின்தோட்டை, குருந்துவத்த, மஹாஹபுகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த மற்றும் பியதிகம ஆகிய பகுதிகளிலேயே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *