ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் சந்திரிகா
சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவருமான, சந்திரிகா குமாரதுங்க, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா பொதுச்செயலருக்கு சந்திரிகா குமாரதுங்க எடுத்துக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.