மேலும்

சிறிலங்காவைக் கடனாளி ஆக்குவதில் சீனாவே தொடர்ந்து முன்னணியில்

Srilanka-chinaசிறிலங்காவுக்கு அதிக வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதில் இந்த ஆண்டிலும் சீனாவே முன்னிலையில் இருப்பதாக  சிறிலங்கா நிதியமைச்சின் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான நிதியமைச்சின் நிதி முகாமைத்துவ அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, சிறிலங்காவுக்கான வெளிநாட்டு கடனுதவிகளில் 35 வீதத்தை சீனாவே வழங்கியுள்ளது. அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக, 901.6 மில்லியன் டொலரை இந்தக் காலப்பகுதியில் சீனா வழங்கியுள்ளது.

இதில் சீனாவின் எக்சிம் வங்கி ஊடாக, 257.1 மில்லியன் டொலரும், சீனாவின் அபிவிருத்தி வங்கி  ஊடாக 62.2 மில்லியன் டொலரும் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சீனாவை அடுத்து, ஆசிய அபிவிருத்தி வங்கி 22 வீதமான வெளிநாட்டு கடனுதவிகளையும், உலக வங்கிய 16 வீதமான கடனுதவிகளையும் சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் வீதிகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கே அதிகளவில்- அதாவது, 43 வீதமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, 10 வீதமான நிதி, சக்தி மற்றும் மின்சக்தி திட்டங்களுக்கும், 9 வீதமான நிதி  நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு திட்டங்களுக்கும், 7 வீதமான நிதி சுகாதார மற்றும் சமூக நலன் திட்டங்களுக்கும், வழங்கப்பட்டுள்ளன.

ஒரு கருத்து “சிறிலங்காவைக் கடனாளி ஆக்குவதில் சீனாவே தொடர்ந்து முன்னணியில்”

  1. E.sivapalan says:

    True

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *