இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் மூன்றாவது வாரத்தில், சிறிலங்கா பிரதமரின் இந்தியப் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் உள்ளடங்கிய உயர்மட்டக் குழுவொன்றும் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, எட்கா உடன்பாடு, மத்தல விமான நிலையத்தை கூட்டமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, இந்திய அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்.