மேலும்

மாதம்: October 2017

சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்

திருகோணமலை – சலப்பையாறு பகுதியில்,  அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட  650இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், சிறிலங்கா அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தின் காட்சிக்காக இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள்

புனேயில் நடைபெறும் இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும், ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள், சிறிலங்கா படையினருக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமானது – மகிந்த எச்சரிக்கை

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமான விடயம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தவே அரசியலில் இறங்கினேன் – சரத் பொன்சேகா

தனது பிரதான எதிரியான மகிந்த ராஜபக்சவின் கடந்த காலத் தவறுகளை அம்பலப்படுத்தவதற்காகவே தாம் அரசியலில் நுழைந்து அமைச்சர் பதவியைப் பெற்றதாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் தெரிவில் இறங்கியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தினால் பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வரிப்பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வர முடிவு

சிறிலங்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு வரிப் பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரியை இரட்டிப்பாக்கும் புதிய திட்டத்துக்கமைய இந்த நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

335 உள்ளூராட்சி சபைகளுக்கு ஜனவரி 20இல் தேர்தல் நடப்பது உறுதி – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் 2018 ஜனவரி 20ஆம் நாள், 333 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறுவது உறுதி என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்ட பேச்சில் சுமந்திரனும் பங்கேற்பு

மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்றன.

சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.