மேலும்

மாதம்: October 2017

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

தாமதமாகும் உள்ளூராட்சித் தேர்தல் – கண்காணிப்பு அமைப்புகள் அதிருப்தி

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட சிறிலங்கா வருகிறது இந்திய குழு

மட்டக்களப்பில் 32 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும், சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் இழுபறி

நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றில் பிரேரணை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி, விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமர்ப்பிக்கவுள்ளார்.

சிறிலங்காவில் சிறப்பு வசதிகளைக் கொண்ட முதல் சிறைச்சாலை

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரிப்பு – டோறாவுக்குப் பதில் பீரங்கிப் படகுகள்

கடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் முதலாவது அரசியல் பேச்சுக்களை நடத்துகிறது மைத்திரி அரசு

பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா- பாகிஸ்தான் இடையிலான ஐந்தாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்களில் பங்கேற்கவே இவர் கொழும்பு வரவுள்ளார்.

வித்தியா கொலை குற்றவாளிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும், மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா

சிறிலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கப்பற் படை ஆகியன இணைந்து கடந்த வாரம் திருகோணமலையில் கடல்நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சியில் (CARAT) ஈடுபட்டன.