மேலும்

மாதம்: August 2017

ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஷ்யாவில் நடக்கும் ‘இராணுவம்-2017’ என்ற அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சி, அனைத்துலக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 84 பேர் மீது நீதிமன்றங்களில் வழக்கு – சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 84 பேர் இன்னமும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விஜேதாச ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரவில்லை

சிறிலங்கா அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தை விட்டு ஓடியவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியவர்களுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும், தனியார் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக மக் கினொன் – நியமிக்கிறது கனடா

சிறிலங்காவுக்கான கனடாவின் புதிய தூதுவராக, மக் கினொன் நியமிக்கப்படவுள்ளார். கனடியத் தூதுவராக பணியாற்றிய ஷெல்லி வைற்றிங் அண்மையில் தமது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியேற்பு

சிறிலங்காவின் 21 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், இன்று  பதவிகளைப்  பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஷங்காய் நகரம் போல தென்னிலங்கையை மாற்றுவோம்- சீனத் தூதுவரின் சபதம்

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு ஏற்ற வகையில், சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

மைத்திரி – ரணில் நேற்றிரவு அவசர சந்திப்பு – விஜேதாசவை நீக்குமாறு கோரினார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு அவசரமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற  நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.