மேலும்

நல்லூர் துப்பாக்கிச் சூடு – சரணடைந்தார் பிரதான சந்தேக நபர்

nallur-shotநல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று சிறிலங்கா காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

இன்று காலை 8.20 மணியளவில் பிரதான சந்தேக நபர் யாழ். காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, பிரதான சந்தேக நபரான, செல்வராசா ஜெயந்தன் (39 வயது)  கைது செய்யப்பட்டுள்ளார் என்று, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *