மேலும்

புலிகளின் ஆரம்பகால செயற்பாடுகளே நினைவுக்கு வருகிறது – என்கிறார் மகிந்த

mahinda-trinco (1)யாழ்ப்பாணத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால செயற்பாடுகளை தமக்கு நினைவுபடுத்துவதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வீரக்கெட்டிய – கொந்தகல விகாரையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

‘நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது.

நாட்டின் சட்டம்,  ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றால் அதனை பாதாள உலகக் குழுக்களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்வாறானது அல்ல.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலத்தையே,  இவ்வாறான சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *