மேலும்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இவரா?

CCTV-footageநல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று நம்பப்படும் ஒருவர் தப்பிச் செல்லும் காட்சி என்று கூறப்படும் ஒளிப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நேற்றுமுன்தினம் மாலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளை நிற உந்துருளி ஒன்றில் மெல்லிய நீல நிறச் சட்டையும், நீளக்காற்சட்டையும் அணிந்த ஒருவர் செல்லும் காட்சி அடங்கிய ஒளிப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

CCTV-footage

இவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் என்றும் கூறப்படுகிறது. எனினும் சிறிலங்கா காவல்துறையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்து விடுவோம் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியிருந்தனர்.

அதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரால் கொண்டு செல்லப்பட்ட வெள்ளை நிற உந்துருளி நேற்றுக்காலை அரியாலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *