முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை
முல்லைத்தீவு- நாயாறில், சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை ஒன்றை சிறிலங்கா இராணுவம் புதிதாக அமைத்துள்ளது.
இங்கு பயிற்சி பெற்ற 38 பேர் கொண்ட முதல் அணியினர் வெளியேறும் நிகழ்வு நேற்று நாயாறு கடலேரியை அண்டிய, பயிற்சிப் பாடசாலை சுற்றுப் புறத்தில் இடம்பெற்றது.
இதில், சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரியும், 14ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியுமான, மேஜர் ஜெனரல் ரால்ப் நுகேரா, இந்த நிகழ்வில் பங்கேற்று 12 வாரப் பயிற்சிகளை முடித்த சண்டை சுழியோடும் கற்கைநெறியை முடித்த 4 அணியைச் சேர்ந்த படையினருக்கான பட்டிகளை அணிவித்தார்.