மேலும்

இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர்- சிறிலங்கா இடையே சுதந்திர வர்த்தக உடன்பாடு

vivian-maithriஇந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு இறுதி செய்யப்படும்.

vivian-maithri

vivian-ravi

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *