மேலும்

கடற்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர்

Commodore D.K.P. Dassanayake2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க, வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பரிந்துரையின் பேரிலேயே அவர் கடற்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வெலிசறை கடற்படை மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட கொமடோர் டி.கே.பி.தசநாயக்க நோயாளர் காவு வண்டியிலேயே நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

இதையடுத்து, அவரை ஜூலை 19ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொமடோர் டி.கே.பி.தசநாயக்க, பின்னர் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கிருந்து தற்போது, வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரது பாதுகாப்புக்காக ஐந்து சிறைக்காவலர்களுக்கு அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *