மேலும்

Tag Archives: முஸ்லிம்

சிறிலங்கா இராணுவத்தில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள்

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

போதிய நடவடிக்கை இல்லை – சிறிலங்கா அரசை சாடுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முகத்தை மூடும் உடைகளுக்கு சிறிலங்காவில் இன்று முதல் தடை

சிறிலங்காவில் முகத்தை முகத்தை மூடி உடைகளை அணிவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் பணியகத்தை மூடத் தயாரா? – சிறிலங்கா அதிபருக்கு அமைச்சர் சவால்

தனது அனுமதியின்றி 40/1  தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு அவர் உத்தரவிட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் வன்முறைகளில் ஈடுபட்ட இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கிறார் ஐ.நா உதவிச்செயலர்

சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டித்துள்ளார்.

வன்முறைகளைத் தூண்டிய மகாசோஹோன் படையணிக்கு வெளிநாட்டு நிதி?

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாகச் சந்தித்த மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் தூதரகங்களின், இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனைய பகுதிகளுக்கும் வன்முறை பரவும் ஆபத்து – பதற்றத்தில் முஸ்லிம்கள்

கண்டியில் ஏற்பட்டுள்ள இனமோதல்கள் சிறிலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக் கூடிய ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்குள் என்கிறது அரசாங்கம்

காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டவில், முஸ்லிம்களுக்கு எதிராக நேற்றிரவு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.