மேலும்

கிழக்கு மாகாண ஆளுனராக றோகித போகொல்லாகம நியமனம்

maithri-rohitha (1)கிழக்கு மாகாண ஆளுனராக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கிழக்கு மாகாண ஆளுனராக, றோகித போகொல்லாகமவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த றோகித போகொல்லாகம பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில், 2007 தொடக்கம் 2010 வரை-  குறிப்பாக போரின் இறுதிக்காலகட்டத்தில், வெளிவிவகார அமைச்சராகவும்- பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

maithri-rohitha (1)

maithri-rohitha (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *