மேலும்

3 மாகாணசபைகளுக்கு வேட்புமனுக் கோரும் வர்த்தமானி ஒக்ரோபர் 2ஆம் நாள் வெளியாகும்

Mahinda Deshapriyaகிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தல், ஒக்ரோபர் 2ஆம் நாள் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளின் ஆயுள்காலம் எதிர்வரும் ஒக்ரோபர் 1ஆம் நாளுடன் நிறைவடைகிறது.

மாகாணசபைகளின் ஆயுள்காலம் முடிந்ததும், புதிய சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைககளை எடுப்பதற்கு  தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்தின் 154 ஆவது பிரிவின் ஈ பகுதியின் கீழ் மாத்திரமே, இந்த மாகாணசபைத் தேர்தல்களை பிற்போட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *