மேலும்

மாதம்: January 2017

நயினாதீவில் புதிய புத்தர் சிலை – பலப்படுத்தப்படும் பௌத்த அடையாளங்கள்

நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியத் தூதுவருடன் சம்பந்தன் கலந்துரையாடல்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்துவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கத் திட்டம்

அடுத்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதே தனது திட்டம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

போராட்டம் ’ஜல்லிக்கட்டில் ‘ தொடங்கியது.மாடுபிடி விளையாட்டில் தொடங்கினாலும், அது வாடிவாசலிலிருந்து வெளியேறி ‘நெட்டோட்டமாய்’ ஓடிக்கொண்டிருக்கிறது. வாடிவாசல் திடலுக்குள் அதன் எல்லைகள் இல்லை:  பண்பாட்டு மீட்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு,வாழ்வியல் மீட்பு போன்ற பல பரிமாணங்களுடையதாய் போராட்ட எல்லைகள் விரிவுபட்டுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

போர் வெற்றியைக் காட்டிக் கொடுக்கும் புதிய அரசியலமைப்புக்கான பணிகளை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவில் துறைமுகங்கள், நிலங்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம் – கிளைமோர் தாக்குதல் நடத்த இரண்டு முறை முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் மங்கி வரும் நீதிக்கான நம்பிக்கை

சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் கூறினார்கள்.

சுவாமிநாதனை வைத்து இழுத்தடிக்க முயன்ற சிறிலங்கா அரசு – கடைசி நேரத்தில் மாறிய முடிவு

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை அனுப்பும் முடிவு கடைசி நேரத்திலேயே எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களை கடத்திய சிறிலங்கா கடற்படை புலனாய்வு பணிப்பாளர் விரைவில் கைது

கொழும்பில் இரண்டு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

மகசின், அனுராதபுர சிறைகளில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மகசின் மற்றும் அனுராதபுர சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.