இந்தியத் தூதுவருடன் சம்பந்தன் கலந்துரையாடல்
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்துவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்திய குடியரசு நாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால், இந்தியா இல்லத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே, புதிய இந்தியத் தூதுவருடன், இரா.சம்பந்தன் கலந்துரையாடினார். எனினும், இது சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் குறுகிய நேர சந்திப்பாகவே இடம்பெற்றது.
இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து கடந்த 24ஆம் நாள் பொறுப்பேற்றிருந்தார்.
இவர் சிறிலங்காவில் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர், இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசியமை இதுவே முதல்முறையாகும்.