சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கத் திட்டம்
அடுத்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதே தனது திட்டம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியில், இயற்கை முறையிலான பசுமைப் பண்ணை விவசாய முறை திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுற்றுச்சழல் பாதிப்பினால் காலநிலை முற்றாக மாறியிருக்கிறது. இதுபோல பல நாடுகளில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படடுள்ளது.
சிறிலங்காவின் வன அடர்த்தி இப்போது 27- 28 வீதமாகவே உள்ளது. இதனை 32 வீதமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிகரிப்பதே சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற வகையில் எனது திட்டமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.