மேலும்

கலப்பு நீதிமன்ற பரிந்துரையை வரவேற்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

zeid-colombo-press (1)நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை, கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரவேற்றுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் கீச்சக (ருவிட்டர்) பக்கத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வரவேற்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்காவில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையே செயிட் ராட் அல் ஹுசேன் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார் என்றும் கீச்சகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *