மேலும்

மாதம்: November 2016

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முனைகிறதா சீனா?

சீனத் தூதுவர் வழமைக்கு மாறாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மற்றும் சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தமையானது கொழும்பில் ஆட்சி மாற்றம் ஒன்றை சீனா எதிர்பார்ப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் பலரும் உற்றுநோக்குகின்றனர்.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.  கூட்டுப் பயிற்சி நிறைவு நிகழ்வு, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மகிந்தவுக்கு சீனா அழைப்பு – இம்மாதம் பீஜிங் செல்கிறார்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவா குழு வேட்டையில் சிறிலங்கா படைச் சிப்பாயும் சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டுப் பேர் வரையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய துக்கநாளில் மதுபான விருந்துடன் இந்தியத் தூதுவரின் பிரியாவிடை – மைத்திரியும் பங்கேற்பு

சிங்கள இசையுலக மேதையான பண்டித அமரதேவாவின் மறைவுக்கு ஏழு நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவின் பிரியாவிடை நிகழ்வில் மதுபான விருந்து அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுதந்திரக் கட்சி உறுப்புரிமை நீக்கத்தை மீளாய்வு செய்யக் கோருகிறார் பீரிஸ்

தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் என்று, முன்னாள் வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆவா குழுவின் பின்னால் இராணுவமும் இல்லை, அரசியலும் இல்லையாம்

வடக்கில் இராணுவ, அரசியல் பின்னணியுடனோ, அரசாங்கத்தின் பின்புலத்துடனோ ஆவா குழு செயற்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பேரை கைது செய்திருப்பதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரிகேடியர் சுரேஸ் சாலியின் கீழ் செயற்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு பிரிவுகள் கலைப்பு

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டதையடுத்து. இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட இரண்டு பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.