இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நிறைவு
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது. கூட்டுப் பயிற்சி நிறைவு நிகழ்வு, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றது.
14 நாட்கள் நடந்த இந்தக் கூட்டுப் பயிற்சியில், தீவிரவாத அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா, இந்திய இராணுவங்களின் சார்பில், தலா 45 படையினர் பங்கேற்றிருந்தனர்.
பயிற்சி நிறைவு நிகழ்வில் இந்திய இராணுவக் குழுவுக்கு பொறுப்பான பிரிகேடியர் சுஜீத் சிவாஜி பாட்டில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்.