மேலும்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கைது

Arrestயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பேரை கைது செய்திருப்பதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில், சில்லாலை, சுன்னாகம் பகுதிகளில் நேற்றுமுன்தினம் நான்கு பேரும், உடுவிலில் நேற்று இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் சகோதரர்கள் என்றும், இவர்கள் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், இவர்களின் ஹையேஸ் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு குழுவொன்றே இவர்களைக் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக யாழ். காவல்நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *