மேலும்

நாள்: 10th November 2016

ஆவா குழுவுடன் தொடர்புடைய சிப்பாய் கைது குறித்து சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியாதாம்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

புலிகளைத் தோற்கடிக்க உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சியில் – மகிழ்ச்சியில் மகிந்த

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் அமெரிக்காவில் பதவிக்கு வந்திருப்பதையிட்டு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஆவா குழுவை சிறிலங்கா இராணுவம் உருவாக்கியதாக கூறவில்லை – ராஜித சேனாரத்ன

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை சிறிலங்கா இராணுவத்தினரே உருவாக்கினர் என்று தான் கூறவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனாவின் கொடையில் வடக்கு, கிழக்கில் 100 விகாரைகளைப் புனரமைக்க சிறிலங்கா முடிவு

சீனாவில் இருந்து அளிக்கப்பட்ட கொடைகளைப் பயன்படுத்தி, வடக்கு- கிழக்கில் உள்ள 100 பௌத்த விகாரைகளை சிறிலங்கா அரசாங்கம் புனரமைப்புச் செய்யவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகம் – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

வவுனியாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பணியகத்தை (கொன்சூலர்) யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.