இன்று சிறிலங்கா அதிபரைச் சந்திக்கின்றனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.