கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அரச வாகனம் ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவை, எதிர்வரும் 2ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற பியசேன பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.