பாரிஸ், பிராங்போட்டுக்கான சேவைகளை இடைநிறுத்துகிறது சிறிலங்கன் விமானசேவை
ஜேர்மனியின் பிராங்போர்ட், மற்றும் பிரான்சின் பாரிஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை இன்று அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் பிராங்போர்ட், மற்றும் பிரான்சின் பாரிஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை இன்று அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு, அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து சக்திகளின் ஒன்றிணைவு மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் காரணமாகவே, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவினால் வெற்றி கொள்ளப்பட்டது என்றும், இவ்வாறானதொரு சூழல் உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெற முடியாது எனவும் இந்தியப் ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள புதிய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சீனாவில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மேலதிக வெடிபொருட்களை, ஒதுக்குப் புறமான இரண்டு இடங்களுக்கு மாற்றியிருப்பதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து மீண்டும் இயல்பான வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.
இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவிலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் மது பாவனை அதிகம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று நடந்த போதை தடுப்பு செயல் திட்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.