மேலும்

நாள்: 5th June 2016

நாலாபுறமும் சீறிப் பாயும் ஆட்டிலறி, பல்குழல் குண்டுகள் – அச்சத்தில் சிதறி ஓடும் மக்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இன்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து, அங்குள்ள ஆட்டிலறி, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி குண்டுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பற்றி எரிகிறது கொஸ்கம இராணுவ ஆயுதக்கிடங்கு – வெடிச்சத்தங்களால் அதிர்வு

கொஸ்கமவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இன்று மாலை 6 மணியளவில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு 4 மாத சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அதிபர் முடிவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளை ஏற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, வரும் டிசெம்பர் மாதம் வரை- நான்கு மாதகால சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இன்னமும் பாதிக்கப்படும் தமிழர்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் முகமாகவே சிறிலங்காவின் பௌத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு எதிராக குற்றவியல் வழக்கு?

பல முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.

மீறல்களை ஒப்புக்கொண்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி மீது இராணுவ நீதிமன்ற விசாரணை

சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டது மற்றும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவியது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்த கடற்படை உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக சிறிலங்கா கடற்படை இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்தவுள்ளது.

மைத்திரி பங்கேற்ற விழாவில் நடந்த தீவிபத்து – முன்னாள் அரச புலனாய்வுத் தலைவரிடம் விசாரணை?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அம்பாந்தோட்டையில் சங்கிரி-லா நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் இடம்பெற்ற தீவிபத்துத் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.