மேலும்

நாள்: 9th June 2016

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வி கண்டது.

சலாவ முகாமில் இருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்கப்படவிருந்தவையா?

சலாவ இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக வெளியான செய்திகளை, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை – என்கிறார் ரணில்

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெடிவிபத்து குறித்து நான்கு பக்க விசாரணை – ஓரம்கட்டப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு

கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, நான்கு தரப்புகளால் சமாந்தரமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

பூகோள அமைதிச் சுட்டி – 18 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா

பூகோள அமைதிச் சுட்டியில், சிறிலங்கா ஒரே ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி, 97 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், பூகோள அமைதிச் சுட்டி-2016 (Global Peace Index) என்ற தரவரிசைப் பட்டியலிலேயே சிறிலங்கா 97ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றவில்லை – ஜெனிவாவில் முறையிடவுள்ளது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.