மேலும்

ஆறுமுகனின் அமைச்சர் கனவு கலைகிறது

arumugam thondamanஇதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினாலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்ட இதொகாவின் ஆறுமுகன் தொண்டமான் மற்றும், ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், மலையகத்தில் இருந்து தெரிவு செய்யபப்பட்டு, அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளி்யிட்ட நிலையிலேயே, தொண்டமானை அமைச்சராக நியமிக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவுக்கு எதிராகப் பரப்புரை செய்தவர்கள் இந்த அரசாங்கத்தின் இடம்பெறுவதற்குத் தகுதியில்லை என்று அரசாங்கத்தின் இடம்பெற்றுள்ள மலையக கட்சிகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *