மேலும்

நாள்: 16th June 2016

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சுமந்திரன் சந்திப்பு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியமில்லை – இந்திய அதிகாரிகள்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனத் தலையீடு குறித்த இந்தியாவின் கரிசனைகளுக்குத் தீர்வு – சிறிலங்கா கூறுகிறது

துறைமுகங்கள் மற்றும் விமானத்துறைகளில் இந்தியாவின் முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வை வலியுறுத்துகிறது இந்தியா

சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமனம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கான ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் இருந்து ஹரீம் பீரிஸ் இன்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனக் காணியில் 400 குடும்பங்களைக் குடியமர்த்த திட்டம்

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 400 குடும்பங்கள், காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

அமெரிக்காவின் பூகோள அரசியல் நலன்களின் மீதே சமந்தா பவர் அக்கறை – விக்னேஸ்வரன் செவ்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் – மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம்

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீத இடமளிக்கும் வகையில், சிறிலங்காவின் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு பிராந்தியத்துக்கு முக்கியமானது – துருக்கி வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின்  பாதுகாப்பும் உறுதித்தன்மையும் இந்தப் பிராந்தியத்துக்கும் அதற்கு அப்பாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு தெரிவித்தார்.

டீசலைக் கொடுத்து அகதிகள் படகை வெளியேற்ற இந்தோனேசியா முடிவு

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையொதுங்கிய இலங்கைத் தமிழ் அகதிகளின் படகுக்குத் தேவையான 7 மெட்ரிக் தொன் டீசலை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக  இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.