ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வுக்குச் செல்கிறார் சந்திரிகா
நியூயோர்க்கில் எதிர்வரும், 10ஆம் ,11ஆம் நாள்களில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வில் சிறிலங்காவின் சார்பில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவரான சந்திரிகா குமாரதுங்க, இந்த அமர்வில், சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத் திட்டங்கள் தொடர்பாக உரையாற்றவுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் தலைவர், மோஜென்ஸ் லைகெற்ரோவ்ட்டின் அழைப்பின் பேரில், ‘உலக அபாயங்களில் அமைதிக்கான கடப்பாடு’ என்ற தொனிப் பொருளிலான இந்த சிறப்பு அமர்வு இடம்பெறவுள்ளது.
இதில், ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், கண்காணிப்பாளர்கள், ஐ.நா பிரமுகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.