மேலும்

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய 12 அகதிகளும் கட்டுநாயக்கவில் கைது

airportகொகோஸ் தீவில் இருந்து அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட 12 அகதிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சிறப்பு விமானம் மூலம் இவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பேச்சாளர், லக்ஸ்மன் சொய்சா தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவினால் திருப்பி அனுபப்பப்பட்ட 12 பேரில் பெண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *