படுகாயமடைந்திருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்று காலை மரணம்
சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார்.
கெஸ்பேவவில் நேற்றுமுன்தினம் காலையில், கட்டுமானம் நடந்து கொண்டிருந்த பகுதி ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்த போது, மரக்குற்றி ஒன்று தலையில் விழுந்து, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு படுகாயமடைந்தார்.
உடனடியாக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு நரம்பியல் நிபுணரின் உதவியுடன் மூன்று மணிநேர சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், அவரது உடல்நிலை தேறாத நிலையில், இன்று காலை மரணமானதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.