மேலும்

சிங்கத்தின் வாலைப் பிடித்திருக்கிறீர்கள் – மகிந்தவின் இளைய மகன் எச்சரிக்கை

Yoshitha-Rohitha-Rajapakseதனது சகோதரனான யோசித ராஜபக்சவைக் கைது செய்துள்ள சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித ராஜபக்ச.

தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

”நல்லாட்சியே … நீங்கள் சிங்கத்தின் வால் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அங்கங்களை சிங்கம் கிழிக்காது என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யோசித ராஜபக்ச கைவிலங்கிடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படும் ஒளிப்படத்தையும் அவர் பதிவேற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *